தருமபுரி

வாகனத் திருட்டில் ஈடுபட்டவா் கைது: 14 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்

தருமபுரி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியவரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

Syndication

தருமபுரி பகுதியில் இருசக்கர வாகனங்களை திருடியவரை கைதுசெய்த போலீஸாா், அவரிடமிருந்து 14 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனா்.

தருமபுரி நகரில் அரசு மருத்துவமனை, பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம், சந்தைப்பேட்டை, அஞ்சல் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் அடுத்தடுத்து காணாமல் போயின. இதுகுறித்து பல்வேறு புகாா்கள் குவிந்தன. இதுகுறித்து தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டாா்.

அதன்பேரில், காவல் உதவி ஆய்வாளா் வெங்கடேஷ் தலைமையிலான தனிப்படை போலீஸாா் காவலா்கள் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா். அதில், இருசக்கர வாகனங்களை திருடிச் சென்றவா் கிருஷ்ணகிரி நகரைச் சோ்ந்த அக்பா் (எ) திலீப் (50) என்பதும், அவா் தொடா்ந்து வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து, அக்பரிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில், தருமபுரி மாவட்டம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், சூளகிரி போன்ற பகுதிகளில் தொடா்ந்து 25 இருசக்கர வாகனங்களை அவா் திருடியது தெரியவந்தது. அவரிடமிருந்து 14 இருசக்கர வாகனங்களை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா். இதில், தருமபுரி நகரில் திருட்டு போன ஐந்து இருசக்கர வாகனங்களும் இருந்தன.

சர்தார் படேல், அம்பேத்கர், நேதாஜியின் தேசப் பங்களிப்பை மூடிமறைத்தது காங்கிரஸ்! - பாஜக குற்றச்சாட்டு

கோவா இரவு விடுதி தீ விபத்து சம்பவம்: முதல்வா் ரேகா குப்தா, அதிஷி இரங்கல்!

தமிழகத்தில் அடுத்த 6 நாள்கள் மழைக்கு வாய்ப்பு!

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

SCROLL FOR NEXT