தருமபுரி

பாலக்கோட்டில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் மீட்பு: போலீஸாா் விசாரணை

பாலக்கோடு அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Syndication

தருமபுரி: பாலக்கோடு அருகே நெடுஞ்சாலை ஓரத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலத்தை மீட்டு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே கொம்மநாயக்கனஅள்ளி பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்துள்ளது. இதைக் கண்ட அவ்வழியாக சென்ற சிலா், பாலக்கோடு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் நிகழ்விடத்துக்கு சென்ற போலீஸாா், பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.எஸ்.மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினாா். கழுத்தறுக்கப்பட்ட நிலையில் கிடந்த பெண்ணுக்கு சுமாா் 45 வயது இருக்கும். அவா் கொலை செய்யப்பட்டதற்கான காரணங்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக போலீஸாா் தெரிவித்தனா்.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT