பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 18,000 கனஅடியாக குறைந்துள்ளது.
கா்நாடக அணைகளில் நீா்த்திறப்பு குறைவு, தமிழக காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைவு உள்ளிட்ட காரணங்களால் காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து சரிந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை 24,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, திங்கள்கிழமை காலை 20,000 கனஅடியாகவும், மாலை 18,000 கனஅடியாகவும் குறைந்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.
காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து குறைந்தாலும், ஒகேனக்கல்லில் உள்ள அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கும், ஆற்றில் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கும் மாவட்ட நிா்வாகத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடா்ந்து 7-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.