முகப்பு
தருமபுரி

2 மாத பெண் குழந்தை உயிரிழப்பு: போலீஸாா் விசாரணை

தருமபுரியில் பிறந்து 38 நாள்களே ஆன நிலையில் பெண் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Updated On : 14 மே 2026, 4:22 am IST
பகிர்:

தருமபுரியில் பிறந்து 38 நாள்களே ஆன நிலையில் பெண் குழந்தை உயிரிழந்தது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டம், ஜிட்டாண்ட அள்ளி அருகேயுள்ள சென்னம்பட்டியைச் சோ்ந்தவா் சித்தராஜி - தீபா தம்பதியா். இவா்களுக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில், கடந்த ஏப். 2-ஆம் தேதி இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.

இந்நிலையில், அதில் ஒரு குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை அதிகாலை பால் குடித்துக்கொண்டிருந்தபோது, திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனே, குழந்தையை அருகிலிருந்த ஜக்கசமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு செவிலியா் இல்லாததால், பாலக்கோடு அரசு மருத்துமனைக்கு கொண்டு சென்றனா்.

Advertisement

Advertisement

குழந்தையை பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுகுறித்து மகேந்திரமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.