கடந்த ஏப்ரலில் நடைபெற்ற அரசு வாரியத் தேர்வில், கிருஷ்ணகிரி கே.இ.டி. பல்தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
இந்தக் கல்லூரியில் பயின்ற எலட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் எஞ்ஜினியரிங் துறை மாணவர் ஆர்.மணிவண்ணன், 700-க்கு 698 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்தார். இந்தத் தேர்வில் இக் கல்லூரியைச் சேர்ந்த 80 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர்.
சிவில் பிரிவில் 82 சதவீத தேர்ச்சியும், மெக்கானிக்கல் பிரிவில் 85, எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் 91.5, எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன் பிரிவில் 96, கணினி பிரிவில் 96 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றனர். அதேபோல் அனைத்துத் துறைகளைச் சேர்ந்த 94 மாணவ, மாணவியர் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றனர்.
95 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் 232 மாணவர்களும், 90 சதவீதத்துக்கு மேல் 313 பேர், 85 சதவீதத்துக்கு மேல் 324 பேர், 80 சதவீதத்துக்கு மேல் 338 பேர், 75 சதவீதத்துக்கு மேல் 364 பேர், 60 சதவீதத்துக்கு மேல் 542 பேர் பெற்றனர்.
இந்தக் கல்லூரியில் பயின்ற முன்றாமாண்டு மாணவர்கள் அனைவரும் முதல்வகுப்பில் தேர்ச்சி பெற்றனர். சாதனை படைத்த மாணவ, மாணவியர் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களை கல்லூரியின் முதல்வர், நிர்வாகத்தினர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.