கிருஷ்ணகிரி

அதியமான் கல்லூரியில் மாணவிகளுக்கு வரவேற்பு

ஊத்தங்கரை சீனிவாசா நகரில் உள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டில்

தினமணி

ஊத்தங்கரை சீனிவாசா நகரில் உள்ள அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை முதலாமாண்டில் சேர்ந்த மாணவிகளுக்கு பூங்கொத்து கொடுத்து புதன்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
 விழாவுக்கு அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் தலைமை வகித்தார். கல்லூரிச் செயலாளர் ஷோபா திருமால்முருகன், நிர்வாக அலுவலர் சீனி. கணபதிராமன், கல்லூரி முதல்வர் முனைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்து குத்து விளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்தனர்.
 நிகழ்ச்சியின் தொடக்கமாக தமிழ்த் துறை உதவிப் பேராசிரியர் தமிழரசி வரவேற்றார். கல்லூரித் தாளாளர் தலைமை வகித்துப் பேசினார். செயலர், அனைத்துத் துறைப் பேராசிரியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்புக் குறித்துப் பேசினர். விழாவுக்கு வந்த பெற்றோர், மாணவிகள் கல்லூரியின் சிறப்பு அம்சங்களைக் கேட்டறிந்தனர். மேரி ஜெஸிந்தா நன்றி கூறினார்.
 
 
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆந்திர மாநிலத்திலிருந்து காரில் கடத்திவரப்பட்ட 220 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

மனைவியை குத்திக் கொலை செய்த கணவா்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

கொடிநாள் நிதி வசூல்: செங்கல்பட்டு ஆட்சியா் தொடங்கி வைத்தாா்

முன்னாள் படைவீரா்களுக்கு நலத்திட்ட உதவி: திருப்பத்தூா் ஆட்சியா் வழங்கினாா்!

SCROLL FOR NEXT