முகப்பு
கிருஷ்ணகிரி

எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புகழஞ்சலி

கிருஷ்ணகிரியில் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 13 பிப்ரவரி 2019, 10:36 am IST
பகிர்:

கிருஷ்ணகிரியில் எழுத்தாளர் பிரபஞ்சனுக்கு புகழஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வானம் வசப்படும் என்ற நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் பிரபஞ்சன், கடந்த டிசம்பர் 21-ஆம் தேதி மரணமடைந்தார். இதையடுத்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் சார்பில், கிருஷ்ணகிரியில் நடைபெற்ற நிகழ்வில், பிரபஞ்சன் எனும் மானுடன் என்ற தலைப்பில் புதுச்சேரியைச் சேர்ந்த ஆசிரியர் விசாகன், பிரபஞ்சன் ஒரு வாழ்நாள் பெண்ணியவாதி என்ற தலைப்பில் கணேஷ் குமார், தாழ்ப் பறக்காத பரததையா கொடி என்ற நூல் குறித்து அம்பேத் ஆகியோர் பேசினர். 
இந்த நிகழ்வில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.சங்கர், செயலாளர் வசந்தராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.