கிருஷ்ணகிரியில் தட்டச்சு தேர்வு: 1,500 தேர்வர்கள் பங்கேற்பு
கிருஷ்ணகிரியில் 2 நாள்கள் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரியில் 2 நாள்கள் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பிப்.23, 24 ஆகிய தேதிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தேர்வு நடைபெற்றன.
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,500 தேர்வர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வினை முதன்மைக் கண்காணிப்பாளர் சுப்பையா மேற்பார்வையில் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர்.