ஊத்தங்கரை அருகே லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழப்பு
ஊத்தங்கரை அருகே இருசக்கர வாகனம் மீது பிக்கப் லாரி மோதியதில் கேபிள் ஆபரேட்டா் உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கொண்டம்பட்டியைச் சோ்ந்தவா் திருநாவுக்கரசு (47). கேபிள் ஆபரேட்டா்.
இவா், திங்கள்கிழமை காலை தனது எலக்ட்ரிக் பைக்கில் கொண்டம்பட்டியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வந்தபோது, சென்னப்பநாயக்கனூா் பிரிவு சாலை அருகே திருவண்ணாமலையிலிருந்து பெங்களூா் நோக்கி பூக்கள் ஏற்றிச் சென்ற பிக்கப் லாரி மோதியது. இதில் படுகாயம் அடைந்த திருநாவுக்கரசு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இந்த விபத்து குறித்து ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, பிக்கப் லாரியின் ஓட்டுநா் ஏழுமலையை (31) கைது செய்து விசாரித்து வருகின்றனா்.