நாமக்கல்

பயிர்க் காப்பீட்டு விழிப்புணர்வு முகாம்

விவசாயிகளுக்கான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் குமாரபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி

விவசாயிகளுக்கான பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் குமாரபாளையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
 வேளாண் துறை மற்றும் கூட்டுறவு துறை இணைந்து நடத்திய இம்முகாமுக்கு, குமாரபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் வி.தேவராஜன் தலைமை வகித்தார். வேளாண் உதவி அலுவலர் எஸ்.மாயாஜோதி வரவேற்றார். உதவி வேளாண் இயக்குநர் பி.அசோக்குமார் முன்னிலை வகித்தார்.
 நாமக்கல் மாவட்ட வேளாண் துணை இயக்குநர் எஸ்.கணேசன் திட்டத்தை விளக்கிப் பேசினார். விவசாயிகள் தங்கள் நிலங்களில் சாகுபடி செய்யும்போது பயிர்க் காப்பீடு செய்வது அவசியம். காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்தால் உரிய இழப்பீடு விவசாயிகளுக்கு வழங்கப்படும். எனவே, மழை, வெள்ளம், வறட்சி என எது வந்தாலும் விவசாயிகள் தங்கள் விவசாயப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க சேலம் மத்திய கூட்டுறவு வங்கியில் சேமிப்புக் கணக்கு தொடங்கப்பட்டது.
 இந்நிகழ்ச்சியில், வேளாண் துணை அலுவலர்கள் கே.குப்பண்ணன், எஸ்.சக்திவேல், கூட்டுறவு கடன் சங்க நிர்வாகிகள் சீனிவாசன், உத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT