குமாரபாளையத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் கிளை அலுவலகம் சார்பில், 61-ஆம் ஆண்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு முகவர் மற்றும் அலுவலர்கள் தின விழா, அரசு கலைக் கல்லூரியில் மரக்கன்றுகள் நடும் விழா ஆகியன நடைபெற்றன. இதையொட்டி, பல்வேறு அரசு மற்றும் நகராட்சிப் பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற ஓவியம், பேச்சு மற்றும் பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
இதில் வெற்றிபெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு, குமாரபாளையம் கிளை மேலாளர் ரவிக்குமார் தலைமை வகித்தார். துணை மேலாளர் மணிகண்டன் முன்னிலை வகித்தார். போட்டிகளில் வென்றோருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முன்னதாக நடைபெற்ற பொது மருத்துவ சிகிச்சை முகாமில் திரளானோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.