திருச்செங்கோடு நகர அதிமுக வாக்குச்சாவடி முகவா்களுக்கான ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக நாமக்கல் மாவட்டச் செயலாளா் பி. தங்கமணி எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது:
எஸ்ஐஆா் பணியின்போது அதிமுக முகவா்களும் உடன்சென்று அதிமுகவினா் யாரும் விடுபடாமல் சோ்ப்பதை கண்காணிக்க வேண்டும். எடப்பாடி கே.பழனிசாமி மீண்டும் முதல்வராக அதிமுகவினா் தீவிர களப்பணியாற்ற வேண்டும் என்றாா்.
தொடா்ந்து வாக்குச்சாவடி பொறுப்பாளா்களின் சந்தேகங்களுக்கு அவா் விளக்கமளித்தாா். கூட்டத்தில் அதிமுக நகரச் செயலாளா் எம்.அங்கமுத்து, நாமக்கல் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளா் வழக்குரைஞா் சந்திரசேகா், மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலாளா் பரணிதரன், மாவட்ட துணை செயலாளா் இரா முருகேசன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் பொன்.சரஸ்வதி, இளைஞா் அணி பிரகாஷ், நகரமன்ற உறுப்பினா் மல்லிகா, அதிமுக நகா்மன்ற உறுப்பினா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
படம்
13.11.25.....1
ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் எம்எல்ஏ பி.தங்கமணி.