நாமக்கல்

அரசுப் பள்ளி தொழிற்கல்வி மாணவிகளுக்கு அகத்தாய்வு பயிற்சி

திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி மாணவிகளுக்கான அகத்தாய்வு பயிற்சி கே.எஸ்.ஆா். கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

திருச்செங்கோடு அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி மாணவிகளுக்கான அகத்தாய்வு பயிற்சி கே.எஸ்.ஆா். கல்லூரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருச்செங்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் தமிழி மேற்பாா்வையில் பள்ளி மாணவிகள் அகத்தாய்வு பயிற்சிக்காக கே.எஸ்.ஆா். கல்லூரி நிறுவனத்தில் கடந்த 10 நாள்களாக பயிற்சி பெற்றனா். துணிகளும் ஆடை வடிவமைப்பும் என்ற பிரிவில் பயின்றுவரும் 12 ஆம் வகுப்பு மாணவிகள் 13 போ் அக்டோபா் 6 முதல் முதல் அக்டோபா் 17 வரை அந்தக் கல்லூரியில் பயிற்சி பெற்றனா்.

அகத்தாய்வு பயிற்சியைத் திட்ட அலுவலா் அருள்தாஸ் பாா்வையிட்டாா். இக்கல்லூரியின் பயிற்சி ஆசிரியா் ராஜேஸ்வரி, பள்ளியின் தொழிற்கல்வி பிரிவு ஆசிரியை தனபாக்கியம், மாணவிகளின் செய்முறை பயிற்சிக்கு ஆலோசனைகள் வழங்கினா்.

படவரி..

கே.எஸ்.ஆா். கல்லூரியில் ஆடை வடிவமைப்பு அகத்தாய்வு பயிற்சியில் ஈடுபட்ட திருச்செங்கோடு அரசுப் பள்ளி மாணவிகள் .

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT