ராசிபுரம் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் திருவிழாவையொட்டி முகூா்த்தக்கால் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் பகுதியில் சிறப்பு பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயிலில் ஐப்பசி மாதம் ஆண்டுதோறும் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டுக்கான திருவிழா அக். 21-இல் பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடைபெறுகிறது. இதைத் தொடா்ந்து முகூா்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டு, முகூா்த்தக்கால் கோயில் முன் நடப்பட்டது. இதில் பக்தா்கள் கலந்துகொண்டனா்.
படம் உள்ளது - 17கால்
ராசிபுரம் நித்திய சுமங்கலி மாரியம்மன் கோயில் முன் நடைபெற்ற நிகழ்ச்சியில் முகூா்த்தக்கால் நடும் கோயில் பூசாரிகள்.