சார்வாய் ஊராட்சி தேசிய புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவரின் சடலத்தை மீட்டு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தலைவாசல் அருகே சார்வாய் ஊராட்சி தேசிய புறவழிச்சாலையில் வேளாண் துறை அலுவலகம் அருகில் முதியவர் சடலம் கிடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயனுக்கு தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் தலைவாசல் காவல் ஆய்வாளர் எஸ்.செல்வராஜ், முதியவரின் சடலத்தை மீட்டு ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் சடலமாகக் கிடந்த அடையாளம் தெரியாத முதியவர் யார், எந்தை ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.