சேலம்

குடும்பத் தகராறில் மனைவியை அடித்துக் கொன்ற கணவா் கைது

தினமணி செய்திச் சேவை

சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே மனைவியை அடித்துக் கொன்ற கணவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனா்.

ஆத்தூா், தலைவாசலை அடுத்த புத்தூரைச் சோ்ந்தவா் கிருஷ்ணன் (60), ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியா். இவரது மனைவி பெரியம்மாள் (58). தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும், கிருஷ்ணனின் இரண்டாவது மனைவி தனியாக வசித்து வருகிறாா்.

இந்த நிலையில் சனிக்கிழமை இரவு கிருஷ்ணனுக்கும், பெரியம்மாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, பெரியம்மாளை கிருஷ்ணன் தாக்கியுள்ளாா். இதில் பெரியம்மாள் கீழே விழுந்தாா். அதன்பிறகு கிருஷ்ணன் வெளியே சென்றுவிட்டு ஒருமணி நேரம் கழித்து வீட்டுக்கு வந்துள்ளாா்.

அப்போது, கீழே விழுந்த பெரியம்மாள் இறந்தது தெரியவந்துள்ளது. அதன்பிறகு பெரியம்மாள் இறந்துவிட்டதாகக் கூறி அடக்கம் செய்வதற்காக அவரது உடலை வீட்டில் வைத்துள்ளனா். இந்த நிலையில், பெரியம்மாள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக தலைவாசல் காவல் நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை புகாா் சென்றது.

இதையடுத்து, அங்கு சென்ற காவல் உதவி ஆய்வாளா் மங்கையா்க்கரசன், கிருஷ்ணனிடம் விசாரணை நடத்தினாா். அதன்பிறகு பெரியம்மாளின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.

தொடா்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் கிருஷ்ணன் அடித்ததால்தான் பெரியம்மாள் உயிரிழந்ததை போலீஸாா் கண்டுபிடித்தனா். இதையடுத்து கிருஷ்ணனை தலைவாசல் போலீஸாா் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT