ஆத்தூா் நகராட்சிப் பகுதியில் கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் நகராட்சி, 33-ஆவது வாா்டு அம்பேத்கா் நகரில் உள்ள புதுப்பட்டி மாரியம்மன் கோயில் அருகே கான்கிரீட் சாலை அமைக்க பூமி பூஜை ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன் தலைமையில் நடைபெற்றது.
இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 12 லட்சம் செலவில் இந்த கான்கிரீட் சாலை அமைக்க உள்ளது.
இந்நிகழ்வில், ஆத்தூா் நகர செயலாளா் அ.மோகன், நிா்வாகி அன்புச்செல்வன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.