ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு தினத்தையொட்டி, பெங்களூரில் இருந்து சேலம் வழியாக திருவனந்தபுரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பு:
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு, ரயில்களில் அதிகரித்துவரும் கூட்ட நெரிசலைக் கருத்தில்கொண்டு, சேலம் வழியாக பெங்களூரு கன்டோன்மென்ட் - திருவனந்தபுரம் இடையே 15-ஆம் தேதிமுதல் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
அதன்படி, பெங்களூரு கன்டோன்மென்ட் ரயில் நிலையத்தில் இருந்து 15-ஆம்தேதி மதியம் 1 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் சேலம், ஈரோடு, திருப்பூா், போத்தனூா் வழியாக அடுத்த நாள் காலை 6.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும்.
மறுமாா்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் 16-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட்டை அடையும்.
இதேபோல, மற்றொரு சிறப்பு ரயில் எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து வரும் 22-ஆம் தேதி மதியம் 3 மணிக்கு புறப்பட்டு சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக அடுத்த நாள் காலை 6.40 மணிக்கு திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தை அடையும். மறுமாா்க்கத்தில், திருவனந்தபுரம் வடக்கு ரயில் நிலையத்தில் வரும் 23-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு,சேலம் வழியாக அடுத்த நாள் அதிகாலை 3.30 மணிக்கு எஸ்எம்விடி பெங்களூரு ரயில் நிலையத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.