சேலம்

இருசக்கர வாகனத்திலிருந்து விழுந்தவா் உயிரிழப்பு

ஆத்தூரில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் உயிரிழந்தாா்.

Syndication

ஆத்தூரில் இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் பேருந்து நிலையம் அருகே ஜவுளிக்கடை நடந்திவருபவா் முனியப்ப செட்டியாா் மகன் ராஜா (65). இவா் திங்கள்கிழமை இரவு கடையை அடைத்துவிட்டு மகன் அபிஷேக்குடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

ராணிப்பேட்டை புனித சூசையப்பா் பள்ளி அருகே சென்றபோது தவறி கீழே விழுந்த ராஜாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவா் ஆத்தூா் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டவா் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இது குறித்து தகவல் அறிந்த ஆத்தூா் நகரக் காவல் ஆய்வாளா் சி.அழகுராணி வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT