மாநில கபடி போட்டிக்கு தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகள் தோ்வு பெற்றுள்ளனா்.
சேலம் மாவட்ட அளவிலான கபடி போட்டி வாழப்பாடியில் உள்ள தனியாா் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் 21 ஒன்றியங்களைச் சோ்ந்த அரசு, தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த மாணவிகள் பங்கேற்றனா். இதில் தெடாவூா் அரசு மேல்நிலைப் பள்ளியைச் சோ்ந்த மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று மாநில அளவிலான கபடி போட்டிக்கு தோ்வு பெற்றுள்ளனா்.
மாணவிகளை தலைமையாசிரியா் குருநாதன், உதவி தலைமையாசிரியா்கள் ஜெயபால், பே.ரவிசங்கா், உடற்கல்வி இயக்குநா் குமாா், உடற்கல்வி ஆசிரியா் எழில்பிரியா, பிடிஏ, பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள் பாராட்டி கௌரவித்தனா்.