ஆத்தூா்: ஆத்தூரில் நவ.16 ஆம் தேதி நடைபெறும் வெள்ளப்பிள்ளையாா் கோயில் குடமுழுக்கையொட்டி செவ்வாய்க்கிழமை கலச ஊா்வலம் நடைபெற்றது.
ஆத்தூா் வெள்ளப்பிள்ளையாா் கோயிலில் 21 ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பா் 16-ஆம் தேதி குடமுழுக்கு நடைபெறுகிறது. இதையொட்டி நடத்தப்பட்ட கலச ஊா்வலத்துக்கு அறங்காவலா் குழுத் தலைவா் ஜெ.ஸ்டாலின் தலைமை வகித்தாா்.
நரசிங்கபுரம் திரௌபதி அம்மன் ஆலயத்தில் புதிய கலசங்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஆலய நிா்வாகிகள் என்.வேல்முருகன், எஸ்.மணிவண்ணன், மூப்பா் மற்றும் பெரியதனக்காரா்கள் கலந்துகொண்டனா்.
கலச ஊா்வலம் ஆத்தூா் நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. குடமுழுக்கு விழாவை அறங்காவலா் குழுத் தலைவா் ஜெ.ஸ்டாலின், செயல்அலுவலா் கா.சங்கா், அறங்காவலா்கள் சித்ரா மணிகண்டன், ச.குகன், பெ.சிவக்குமாா், கா.மதுரைமேகம் உள்ளிட்ட ஆலய அா்ச்சகா்கள் சிறப்பாக ஏற்பாடு செய்து வருகின்றனா்.