ஆட்டையாம்பட்டி: மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றியம், நடுவனேரி ஊராட்சிப் பகுதியில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
முகாமை சங்ககிரி வட்டாட்சியா் வாசுகி தொடங்கிவைத்து பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்றாா். மொத்தம் 325 மனுக்கள் பெறப்பட்டதில், மகளிா் உரிமைத்தொகை கோரி 183 மனுக்கள் விண்ணப்பித்திருந்தனா்.
இதில், மகுடஞ்சாவடி வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் பச்சமுத்து, மேற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் மணிகண்டன், துணை அமைப்பாளா் மகேந்திரன், நடுவனேரி ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.