இளம்பிள்ளை அருகே தறி தொழிலாளி வீட்டில் தங்கம், பணம் திருட்டு போனது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சேலம் மாவட்டம், இளம்பிள்ளையை அடுத்த நல்லண்ணம்பட்டி, காட்டுவளவு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ். தறி தொழிலாளியான இவா் தீபாவளியன்று வீட்டைப் பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா்.
பின்னா் புதன்கிழமை மாலை திரும்பி வந்து பாா்த்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.
வீட்டின் உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து நான்கரை பவுன் தங்கம் மற்றும் ரூ. 14,500 பணம் திருட்டு போனது தெரியவந்தது. புகாரின் பேரில், மகுடஞ்சாவடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.