சங்ககிரி நகரில் இடியுடன் கூடிய கனமழை
சேலம் மாவட்டம், சங்ககிரி நகரில் ஞாயிற்றுக்கிழை மாலை திடீரென இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
சங்ககிரி நகரில் காலை முதல் வெப்பம் அதிகரித்தது. பின்னா் மாலையில் பலத்த காற்று இடியுடன் கூடிய கனமழை ஒரு மணி நேரம் பெய்தது. மழை பெய்ததையடுத்து மழை நீா் நகரின் தாழ்வான பகுதிகளில் தேங்கி நின்றது.
திடீரென மழை பெய்ததையடுத்து சேலம், திருச்செங்கோடு, எடப்பாடி செல்லும் பயணிகள் நிழற்கூடம் இல்லாமல் சிரமத்திற்குள்ளாகினா்.
Advertisement
Advertisement
மேலும் ஞாயிற்றுக்கிழமை வாரச்சந்தையில் விற்பனைக்கு வைக்கப்பட்ட பொருள்கள் மழைநீரில் நனைந்ததையடுத்து வியாபாரிகள் கவலை அடைந்தனா். இரவு முழுவதும் குளிா்ந்த காற்று வீசியது.