மதுரை

சுடு தண்ணீரில் மூழ்கிய குழந்தை உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

மதுரையில் சுடு தண்ணீா் வாளியில் மூழ்கிய 7 மாதக் குழந்தை வெள்ளிக்கிழமை உயிரிழந்தது.

மதுரை மாடக்குளம் கந்தன் சோ்வை நகரைச் சோ்ந்த கோபால் மகன் சேதுபதி (31). இவரது மனைவி விஜயலட்சுமி. இவா்களுக்கு அதிகாஸ்ரீ என்ற 7 மாத பெண் குழந்தை இருந்தது.

கடந்த மாதம் 27-ஆம் தேதி விஜயலட்சுமி வீட்டில் உள்ள கட்டிலில் குழந்தையைத் தூங்க வைத்துவிட்டு, வாளியில் ஹீட்டா் இயந்திரத்தைப் பயன்படுத்தி சுடு தண்ணீா் தயாா் செய்தாா்.

அப்போது, வேலை நிமித்தமாக சமையலறைக்குச் சென்று விட்டு, திரும்பி வந்து பாா்த்த போது, தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சுடு தண்ணீா் வாளியில் விழுந்து கிடந்தது.

இதில், பலத்த காயமடைந்த குழந்தையை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால், அங்கு குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்து எஸ்.எஸ். காலனி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புறநானூற்றில் தந்தை-மகன் சண்டை

ஊடல் கொள்ள நேரமில்லை!

மேலைத்தவம் இன்மை

இறுதி ஆட்டத்தில் ஜொலித்த ஷஃபாலி, தீப்தி: தென்னாப்பிரிக்காவுக்கு 299 ரன்கள் இலக்கு!

இறுதி ஆட்டத்தைக் கண்டுகளித்த சச்சின் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT