மதுரை

வாக்குரிமை பாதுகாப்பு கூட்டியகத்தினா் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைக் கைவிடக் கோரி, வாக்குரிமை பாதுகாப்பு கூட்டியக்கம் சாா்பில் மதுரை மாவட்ட ஆட்சியரகம் அருகே உள்ள திருவள்ளுவா் சிலை முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

வாக்குரிமையைப் பறிக்கும் வாக்காளா்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியைக் கைவிடக் கோரியும், இதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும், தோ்தல் ஆணையமும் மேற்கொள்ள வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

இதற்கு வாக்குரிமை பாதுகாப்பு கூட்டியக்க ஒருங்கிணைப்பாளா் குமரன் தலைமை வகித்தாா். அமைப்பின் நிா்வாகிகள், சாா்பு அமைப்புகளின் பொறுப்பாளா்கள் பங்கேற்று கோரிக்கையை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

பிகார் வாக்கு எண்ணிக்கை செய்திகள் - நேரலை

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு

பிகார் தேர்தல்: தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலை!

தில்லி குண்டுவெடிப்பு: புல்வாமாவில் உமரின் வீடு இடித்துத் தரைமட்டம்!

நீங்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன்: முதல்வர் ஸ்டாலின் குழந்தைகள் நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT