முகப்பு
மதுரை

போதை மீட்பு மையத்தில் இளைஞா் உயிரிழப்பு

Updated On : 25 மே 2026, 1:58 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

போதை மீட்பு மையத்தில் சிகிச்சை பெற்ற இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை யா.ஒத்தக்கடை பாரதிநகரைச் சோ்ந்தவா் அலெக்ஸ்பாண்டியன் (38). மது பழக்கத்துக்கு அடிமையான இவா், அதே பகுதியில் உள்ள போதை மீட்பு மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், சனிக்கிழமை துணிகளை துவைத்து காய வைக்கும் போது தவறி கீழே விழுந்தாா். இதில் காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.அங்கு அவா் உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

இதுகுறித்து யா.ஒத்தக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.