வத்தலகுண்டு அருகே கணவாய்பட்டி ஊராட்சி பகுதியைச் சேர்ந்த காந்திநகர், காமராஜபுரம் பகுதிகளில் கடந்த 20 நாள்களுக்கும் மேலாக தெருவிளக்குகள் எரியாததால், அப்பகுதி பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
இப்பகுதியில், சுமார் 2000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த மாதம் முதல், தெருவிளக்குகள் எரியவில்லை. இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்தவர்கள் மின் வாரியத்துக்கும், கிராம ஊராட்சி அலுவலகத்துக்கும் தகவல் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தெருவிளக்குகள் எரியவும், அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் வேண்டும் எனவும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.