திண்டுக்கல் அருகே புதன்கிழமை தனியார் பேருந்து கவிழ்ந்து 30 பயணிகள் காயமடைந்தனர்.
பழனியிலிருந்து புறப்பட்ட அந்த தனியார் பேருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தது. ரெட்டியார்சத்திரம் அடுத்துள்ள கதிரையன்குளம் பிரிவு அருகே வந்தபோது, முன்னால் சென்ற பேருந்தை முந்திச் செல்ல அந்த தனியார் பேருந்தின் ஓட்டுநர் முத்துப்பாண்டி முயற்சித்தார். அப்போது எதிரே பேருந்து வந்ததால் முத்துப்பாண்டி, இடதுபுறமாக பேருந்தை திருப்ப முயன்றபோது பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலத்த காயமடைந்த 24 பேர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனை அடுத்து 2 ராட்சத கிரேன்கள் மூலம் அந்த பேருந்தை தூக்கி நிறுத்தும் பணி நடைபெற்றது. இதனால் திண்டுக்கல்- பழனி சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
விபத்து குறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.