வத்தலகுண்டுவில் அருள்மிகு ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கியதையடுத்து அம்மனுக்கு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பூத்தேரில் நகரின் முக்கிய வீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இதன் தொடர்ச்சியாக புதன்கிழமை அம்மனுக்கு தீச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டது. மேலும், வத்தலகுண்டுவில் உள்ள பக்தர்கள் ஏராளமானோர் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். திருவிழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.