பழனி அருகே வரதமாநதி அணையில் செவ்வாய்க்கிழமை குளிக்கச் சென்ற இளைஞர் பாறையில் தலை மோதி உயிரிழந்தார்.
பழனி பெரியப்பா நகரைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகன் மோகன் (30). இவர் தந்தையுடன் திருமண மணவறை அலங்கார வேலைகள் செய்து வந்தார். இவர் செவ்வாய்க்கிழமை பழனி வரதமாநதி அணைக்கு நண்பர்களுடன் குளிக்கச் சென்றார். அப்போது குளிப்பதற்காக மேடான பகுதியில் இருந்து அணையில் குதித்த போது பாறையில் தலை மோதி பலத்த காயம் அடைந்தார். உடனடியாக பழனி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதுகுறித்து ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.