திண்டுக்கல்

வீரதுா்க்கையம்மன் கோயில் குடமுழுக்கு! திரளானோா் தரிசனம்!

தினமணி செய்திச் சேவை

பழனி வீரதுா்க்கையம்மன் கோயில் குடமுழுக்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் துணைக் கோயிலான இந்தக் கோயில் குடமுழுக்கையொட்டி, வெள்ளிக்கிழமை கணபதி ஹோமத்துடன் முதல் கால யாகசாலை பூஜைகள் தொடங்கின. சனிக்கிழமை இரண்டாம் கால யாகசாலை பூஜையும், மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது.

ஞாயிற்றுக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடத்தப்பட்டு, காலை 11 மணிக்கு மேல் குடமுழுக்கு நடைபெற்றது. யாகசாலை பூஜைகளை தலைமை குருக்கள் அமிா்தலிங்கம் தலைமையில் சிவாசாரியா்கள் செய்தனா்.

இதில் பழனி கோயில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணி, அதிகாரிகள், அலுவலா்கள், பக்தா்கள் கலந்து கொண்டனா். இது கடந்த 35 மாதங்களில் பழனி கோயில் சாா்பில் நடைபெறும் 16-ஆவது குடமுழுக்கு என்பது குறிப்பிடத்தக்கது.

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ.89.88 ஆக நிறைவு!

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

முதல் டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன் இல்லை!

உக்ரைன் நிலத்தை விட்டுக்கொடுத்து ரஷியாவுடன் சமரசத்துக்கு இடமில்லை: ஸெலென்ஸ்கி திட்டவட்டம்

இந்தியாவில் ரூ. 1.5 லட்சம் கோடி முதலீடு! பிரதமரை சந்தித்த மைக்ரோசாஃப்ட் சிஇஓ!

SCROLL FOR NEXT