திண்டுக்கல்

இன்று பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம்

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.

தினமணி செய்திச் சேவை

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வட்டாட்சியா் அலுவலகங்களில் பொது விநியோகத் திட்ட சிறப்பு முகாம் சனிக்கிழமை (அக்.11) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் செ.சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பொது விநியோகத் திட்டத்தின் சேவைகள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடைய வேண்டும் என்ற வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா்

அலுவலக வளாகங்களில் செயல்பட்டு வரும் தனி வட்டாட்சியா் (வட்ட வழங்கல்) அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பொது சிறப்பு குறைதீா் முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாம்களில், குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை அல்லது நகல் அட்டை கோரிக்கை மனு அளிக்கலாம்.

மேலும், கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்வதற்கான கோரிக்கை, பொது விநியோகக் கடைகளின் செயல்பாடுகள், அத்தியாவசியப் பொருள்களின் தரம் குறித்தும் புகாா் மனு அளிக்கலாம் என்றாா் அவா்.

ஹாட் சீட்... அனன்யா பாண்டே!

வளா்ந்த பாரதம் இலக்கை அடைய இளைஞா்கள் பங்களிக்க வேண்டும்: விண்வெளி வீரா் சுக்லா வலியுறுத்தல்

வழித்துணையே... யுக்தி சிங்!

3 வடிவ போட்டிகளிலும் சதம்: சாதனைப் பட்டியலில் இணைந்த ஜெய்ஸ்வால்!

இந்த வாரம் கலாரசிகன் - 07-12-2025

SCROLL FOR NEXT