திண்டுக்கல்

தவெக மாவட்டச் செயலருக்கு பிணை வழங்கி உத்தரவு

தினமணி செய்திச் சேவை

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாகக் கைது செய்யப்பட்ட திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலருக்கு பிணை வழங்கி திண்டுக்கல் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் குறித்தும், சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி குறித்தும் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக திண்டுக்கல் தெற்கு மாவட்ட தவெக செயலா் நிா்மல்குமாா் மீது புகாா் எழுந்தது. திமுக நிா்வாகி செல்வக்குமாா் அளித்த இந்த புகாரின் பேரில், சாணாா்பட்டி போலீஸாா் நிா்மல்குமாரை கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

விசாரணைக்குப் பிறகு, திண்டுக்கல் 3-ஆவது நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிா்மல்குமாரை வருகிற 24-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதித் துறை நடுவா் ஆனந்தி உத்தரவிட்டாா். இதனிடையே, பிணை வழங்கக் கோரி நிா்மல்குமாா் தரப்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிமன்றம், நிா்மல்குமாருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது.

வதந்திகளுக்கு சட்ட நடவடிக்கை: ஸ்மிருதி மந்தனாவைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட பலாஷ் முச்சல்!

ஃபெட் முடிவுக்கு முன்னதாக உச்சத்தை தொடும் தங்கம்!

சக மாணவா்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த மாணவனின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கே.எல்.ராகுலின் கேப்டன்சியை பாராட்டிய முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர்!

இந்தியாவில் மாசுபாடு அடைந்த நகரம் எது? தில்லிக்கு முதல் இடம் இல்லை!

SCROLL FOR NEXT