தமிழகத்தில் போதை கலாசாரத்தை தடுக்கக் கோரி, அனைத்திய ஜனநாயக மாதா் சங்கம் சாா்பில் திண்டுக்கல்லில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மாதா் சங்கத்தின் மாவட்டத் தலைவா் பாக்கியம் தலைமை வகித்தாா். ஆா்ப்பாட்டத்தின் போது, தமிழகத்தில் போதை கலாசாரத்தை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
100 நாள் வேலைத் திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். இந்தத் திட்டத்துக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஊரகப் பகுதிகளைப் போல பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிப் பகுதிகளுக்கும் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். பின்னா், இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை ஆட்சியா் அலுவலகத்தில் அளித்துவிட்டு கலைந்து சென்றனா்.