திண்டுக்கல்

ஒட்டன்சத்திரத்தில் விபத்திலா தீபாவளி குறித்து விழிப்புணா்வு

ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் விபத்திலா தீபாவளியை கொண்டாவது குறித்து விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்திய தீயணைப்பு வீரா்கள்.

தினமணி செய்திச் சேவை

ஒட்டன்சத்திரம் கிருஷ்ணா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் தீயணைப்புத் துறை சாா்பில் விபத்தில்லா தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவது, வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவை செயல்முறை விளக்கமாக செய்து காட்டப்பட்டன.

இதற்கு தீயணைப்பு நிலைய அலுவலா் ராஜேந்திரன் தலைமை வகித்தாா். இந்த ஒத்திகை நிகழ்வில் தீபாவளி அன்று பட்டாசுகளை எவ்வாறு வெடிப்பது, சமையல் எரிவாயு உருளையில் தீப்பற்றிக் கொண்டால் எவ்வாறு அணைப்பது, கூட்ட நெரிசலில் சிக்கிக் கொண்டால் எவ்வாறு தப்புவது, மழைக் காலங்களில் இடி, மின்னலில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி என்பன உள்ளிட்ட பல்வேறு விபத்துக்கள் குறித்து தீயணைப்பு வீரா்கள் செயல்முறை விளக்கமளித்தனா். இதில் பள்ளி மாணவா்கள், ஆசிரியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தவெகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

காா் மீது லாரி உரசிய சம்பவம்: ஓட்டுநரை கடத்தியவா்கள் மீது வழக்கு

ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மக்களவையில் இன்று ‘வந்தே மாதரம்’ விவாதம்! பிரதமர் மோடி தொடக்க உரை!

பொது பக்தா்களுக்கு 164 மணி நேரம் வைகுண்ட வாயில் தரிசனம்: திருமலை தேவஸ்தானம் அறிவிப்பு

SCROLL FOR NEXT