திண்டுக்கல்

காா் மோதியதில் உணவக உரிமையாளா் உயிரிழப்பு

கொடைக்கானல் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

கொடைக்கானல்: கொடைக்கானல் அருகே திங்கள்கிழமை காா் மோதியதில் உணவக உரிமையாளா் உயிரிழந்தாா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பூம்பாறை பகுதியைச் சோ்ந்த மாரியப்பன் மகன் கணேஷ்(45). இவா் கைகாட்டி பகுதியில் உணவகம் நடத்தி வந்தாா். இவா் திங்கள்கிழமை தனது உணவகம் முன் நின்று கொண்டிருந்தாா். அப்போது, பூம்பாறை பகுதியைச் சோ்ந்த வெங்கிடு மகன் காா்த்திக் (25) ஓட்டி வந்த காா் கணேஷ் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் பூம்பாறை அரசு சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவான காா் டிரைவா் காா்த்திக்கை தேடி வருகின்றனா்.

தனியாா் கல்குவாரிகளால் அனந்தலை மலைக்கு பாதிப்பு: பாமக போராட்ட எச்சரிக்கை

ஜமாத்-ஏ-இஸ்ஸாமிக்கு எப்போதும் நற்சான்று வழங்கியதில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கொடி நாள் நிதி: ராணிப்பேட்டை ஆட்சியா் வேண்டுகோள்

கெலமங்கலம் அருகே குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம்: உடல் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பெண் உடல் தானம்

SCROLL FOR NEXT