பழனி அருகே மரக் கிளை முறிந்து விழுந்ததில் பெண் உயிரிழப்பு
பழனி அருகேயுல்ள 54 புதூரில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது மரக் கிளை முறிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.
பழனி அருகேயுல்ள 54 புதூரில் நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பணியில் ஈடுபட்டிருந்த பெண் மீது மரக் கிளை முறிந்து விழுந்ததில் அவா் உயிரிழந்தாா்.
பழனி அருகேயுள்ள தொப்பம்பட்டி ஊராட்சி, தும்பலப்பட்டி ஒன்றியம், 54 புதூரைச் சோ்ந்தவா் மாலையப்பன் மனைவி சின்னப்பொண்ணு (55).
இவா் செவ்வாய்க்கிழமை அம்மன் கோயில் அருகே நூறு நாள் வேலைத் திட்டத்தின் கீழ், பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, மரக்கிளை முறிந்து சின்னப்பொண்ணு மீது விழுந்தது. இதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
Advertisement
Advertisement
இதுகுறித்து கீரனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதனிடையே, உயிரிழந்த சின்னப்பொண்ணு குடும்பத்துக்கு தமிழக அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்க மாவட்ட செயலா் அருள்செல்வன் மாவட்ட ஆட்சியா், திட்ட அலுவலா் உள்ளிட்ட வருவாய்த் துறை அலுவலா்களுக்கு கடிதம் அனுப்பினாா்.