உசிலம்பட்டி அருகே செம்பட்டியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் சீராக வழங்கக்கோரி புதன்கிழமை சாலை மறியல் ஈடுபட்டனர்.
செம்பட்டி கிராமத்திற்கு சில மாதங்களாக குடிநீர் சீராக வழங்கவில்லையாம். இப்பகுதிக்கு குடிநீர் சீராக வழங்க கோரி பலதடவை மனுக்கள் கொடுத்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம்.இதனால் ஆத்திரமடைந்த பொது மக்கள் உசிலம்பட்டி-திருமங்கலம் சாலையில் செம்பட்டி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த உசிலம்பட்டி வட்டாட்சியர் செ.இ.ராமச்சந்திரன் மற்றும் காவல் துறையினர் மறியல் செய்தோரிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.இரண்டு நாள்களில் சீராக குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று கூறியதை அடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் இப்பகுதியில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.