உசிலம்பட்டி உப மின்நிலையம், வாலாந்தூர் மற்றும் மொண்டிக்குண்டு உப மின் நிலையங்களில் வியாழக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருக்கின்றன.
எனவே, காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை, உசிலம்பட்டி நகர், நக்கலப்பட்டி, குரவக்குடி, கட்டக்கருப்பன்பட்டி, தொட்டப்பநாயக்கனூர், மேக்கிலார்பட்டி, கீரிப்பட்டி, பாப்பாபட்டி, சடச்சிபட்டி, பூதிபுரம், கணவாய்பட்டி, வேப்பனூத்து, வடுகபட்டி, போத்தம்பட்டி, அய்யனார்குளம், நாட்டாபட்டி, வின்னக்குடி, வாலாந்தூர், நாட்டாமங்கலம், செல்லம்பட்டி, ஆரியபட்டி, கொடிக்குளம், விக்கிரமங்கலம், முதலைக்குளம், நரியம்பட்டி, சிந்துபட்டி, தும்மக்குண்டு, உத்தப்பநாயக்கனூர், உ. வாடிப்பட்டி, குளத்துப்பட்டி, கல்யாணிப்பட்டி, கல்லூத்து, ஏறவார்பட்டி, மொண்டிக்குண்டு, கொப்பிளிப்பட்டி, வெள்ளைமலைப்பட்டி, வையம்பட்டி, லிங்கப்ப நாயக்கனூர், புதுக்கோட்டை, சீமானூத்து, துரைசாமிபுரம்புதூர் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, மின்வாரியச் செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.