மதுரை

பள்ளி பேருந்து மோதி அரசு பேருந்து ஓட்டுநர் சாவு

திருமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது பள்ளி பேருந்து மோதியதில்,  அரசு பேருந்து ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.

DIN

திருமங்கலம் அருகே இரு சக்கர வாகனம் மீது பள்ளி பேருந்து மோதியதில்,  அரசு பேருந்து ஓட்டுநர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
   திருமங்கலம் அருகே உச்சப்பட்டியைச் சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (45). இவர், டி.கல்லுப்பட்டி போக்குவரத்துக் கழக பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்தார். செவ்வாய்க்கிழமை பணி முடிந்து உச்சப்பட்டியிலுள்ள வீட்டுக்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, ஆலம்பட்டி அருகே எதிரே வந்த தனியார் பள்ளி வாகனம் மோதியது. இதில் கல்யாணசுந்தரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.  திருமங்கலம் தாலுகா போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாதிவாரி கணக்கெடுப்பு: டிச. 17-ல் அனைத்துக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்!

சிரஞ்சீவி - நயன்தாராவின் புதிய பட பாடல்!

அனுபமாவின் லாக் டவுன்: புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

கொல்லத்தில் தீ விபத்தில் 10 மீன்பிடி படகுகள் எரிந்து நாசம்

தவெகவுடன் கூட்டணியா? டிடிவி தினகரன் பதில்!

SCROLL FOR NEXT