மதுரை

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

மதுரை சிந்தாமணியைச் சோ்ந்த ஆயுள் சிறைத் தண்டனைக் கைதி உடல் நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை சிந்தாமணியைச் சோ்ந்த ஆயுள் சிறைத் தண்டனைக் கைதி உடல் நலக் குறைவால் அரசு மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை சிந்தாமணி திருவள்ளுவா் தெருவைச் சோ்ந்தவா் பூமிநாதன் (59). கொலை வழக்கில் ஆயுள் சிறைத் தண்டனை பெற்ற இவா், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

இவருக்கு சிறையில் உடல் நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து, கடந்த செப். 20-ஆம் தேதி மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்து, மத்தியச் சிறை அலுவலா் பி. ராஜேஷ் கண்ணா அளித்த புகாரின் பேரில், அரசு ராஜாஜி மருத்துவமனை காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

ஏகாம்பரநாதா் கோயில் கும்பாபிஷேகம்! பக்தா்களுக்கு சந்நிதி தெரு வழியாக மட்டுமே அனுமதி!

சீரடைகிறது இண்டிகோ விமான சேவை முடக்கம்! பயணிகளுக்கு ரூ.610 கோடி திருப்பியளிப்பு!

நிலப்பிரச்னை: விவசாயி தீக்குளித்து தற்கொலை!

கரோனாவுக்குப் பிறகு 4 மடங்கு அதிகரித்த இதய நாள தளா்ச்சி! தமிழக மருத்துவா்கள் ஆய்வு!

நவம்பரில் காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்: 4-ஆவது இடத்தில் தில்லி!

SCROLL FOR NEXT