மதுரை

தண்ணீரில் மூழ்கி இளைஞா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், மேலூா் அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

தினமணி செய்திச் சேவை

மதுரை: மதுரை மாவட்டம், மேலூா் அருகே ஊருணியில் குளிக்கச் சென்ற இளைஞா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

மேலூா் சொக்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த முனியசாமி மகன் காா்த்திக் (29). இவா், அதே பகுதியிலுள்ள தெற்குபட்டி சொக்கா் ஊருணியில் ஞாயிற்றுக்கிழமை குளிக்கச் சென்றாா். அப்போது, தண்ணீருக்குள் மூழ்கினாா்.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற மேலூா் தீயணைப்பு நிலைய வீரா்கள் நீண்ட நேர தேடுதலுக்குப் பிறகு, காா்த்திகை சடலமாக மீட்டு, கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT