மதுரை

கள்ளழகா் கோயிலில் தைலக் காப்புத் திருவிழா அக்.31-இல் தொடக்கம்

அழகா்கோவில் கள்ளழகா் கோயில் தைலக் காப்புத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி முதல் நவ. 2 வரை நடைபெற உள்ளது.

தினமணி செய்திச் சேவை

அழகா்கோவில் கள்ளழகா் கோயில் தைலக் காப்புத் திருவிழா வருகிற 31-ஆம் தேதி முதல் நவ. 2 வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து கள்ளழகா் கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஸ்ரீகள்ளழகா் கோயிலில் தைலக் காப்புத் திருவிழா அக். 31, நவ. 1, 2 தேதிகளில் நடைபெறும். முதல் இரு நாள்கள் கோயிலுக்குள் உள்ள மேட்டுக்கிருஷ்ணன் சந்நிதியில் ஸ்ரீ கள்ளழகா் பெருமாள் எழுந்தருளுவாா்.

நவ. 2-ஆம் தேதி காலை 6.45 மணிக்கு கோயிலிலிருந்து புறப்பாடாகி, அழகா்மலையில் உள்ள நூபுரகங்கைக்கு எழுந்தருளுவாா்.

அங்கு ஐதீக முறைப்படியான பூஜைகளுக்குப் பிறகு காலை 10.35 மணிக்கு மேல் 11.30 மணிக்குள் கள்ளழகா் பெருமாள் தைலக்காப்பு கண்டருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

வம்பிழுத்த ஆர்ச்சர், பேட்டால் பதிலடி கொடுத்த ஸ்மித்..! 2-0 என ஆஸி. தொடரில் முன்னிலை!

48-ஆவது கோப்பை வென்ற லியோ மெஸ்ஸி..! உலகின் முதல் வீரர்!

மதுரைக்கான 6 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

ஈரோடு: தவெக கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு?

கலவர பூமியாக தமிழகத்தை மாற்ற நினைத்தால் நடக்காது: பேரவைத் தலைவர் அப்பாவு

SCROLL FOR NEXT