முதுகுளத்தூர் அருகே புளியங்குடி சிவகாளி அம்மன் கோயில் வைகாசிக் களரித் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவிழாவில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற்றது. விழாவினை முன்னிட்டு திருவிளக்கு பூஜை, அக்னிச்சட்டி எடுத்தல், பூக்குழி இறங்குதல், கரகம் எடுத்தல், கரும்பாலைத் தொட்டி எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்ற நேர்த்தி கடன்களை பக்தர்கள் செலுத்தினர். விழாவில் புளியங்குடி,காக்கூர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினர் விழாவில் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்றுச் சென்றனர். கிராமத்தினர் சார்பில் பொது அன்னதானம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.