திருவாடானை அருகே பாண்டுகுடியில் உள்ள காமாட்சி அம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக செவ்வாய்க்கிழமை விக்னேஸ்வரர் பூஜை, கணபதி பூஜைகளுடன் யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.
புதன்கிழமை காலை காமாட்சி அம்மன், காளியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகமும் நடைபெற்றன. இதில் சுற்று வட்டாரத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.