ராமநாதபுரம்

முதுகுளத்தூர், கடலாடியில் இடி மழை: 10 வீடுகள் சேதம்

முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் புதன்கிழமை மதியம் முதல் மாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்ததில் 10 வீடுகள் சேதம் அடைந்தன.

DIN

முதுகுளத்தூர்,கடலாடி பகுதியில் புதன்கிழமை மதியம் முதல் மாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்ததில் 10 வீடுகள் சேதம் அடைந்தன.
  சூறாவளிக் காற்று, இடியுடன் சுமார் 2 மணி நேரம் பெய்த மழையினால், பல இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாய்ந்து விழுந்தன. முதுகுளத்தூர் அருகே மேலச்சாக்குளம் கிராமத்தில் சூறாவளியுடன் பெய்த மழையில் கருப்பசாமி, தனிக்கோடி,திருமூர்த்தி, முத்துமுனியாண்டி, கிருஷ்ணன், காளிமுத்து, கிழவத்தேவர் உள்பட 10 பேரின் ஓட்டு வீடுகளில் இடிவிழுந்து ஓடுகள் சேதம் அடைந்தன.
 இது குறித்து முதுகுளத்தூர் வட்டாட்சியரிடம் தகவல் தெரிவித்துள்ளதாக கிராம மக்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்றும் இளமை... நதியா!

ராகுல் தகுதியற்றவர் என்பது இந்தியா கூட்டணித் தலைவர்கள் கருத்து: பாஜக

புதின் வருகையையொட்டி இப்படியெல்லாம் செய்வீர்களா? ரஷிய பத்திரிகையாளர்கள் அதிருப்தி!

ஸ்வயம் தோ்வுகளுக்கான மையங்களை சொந்த மாநிலத்திலேயே ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு வில்சன் எம்.பி. கடிதம்

சர்வதேச கிரிக்கெட்டில் 20000 ரன்களைக் கடந்த ரோஹித் சர்மா!

SCROLL FOR NEXT