ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே புளியங்குடி கிராமத்தைச்சேர்ந்தவர்கள் லெட்சுமணத்தேவர் மகன் திருநாவுக்கரசு(26), ராமலிங்கம் மகன் தனசேகரன் (33)ஆகியோர் மின்னல் தாக்கியதில் இறந்தனர். இறந்த 2 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் வழங்க மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில், தனசேகரனின் மனைவி வசந்தி, திருநாவுக்கரசின் தந்தை லெட்சுமணன் ஆகியோர் வங்கி கணக்கில் ரூ.4 லட்சத்தை வரவு வைத்து அதற்கான ஒப்புதல் ரசீதை பயனாளிகளிடம் முதுகுளத்தூர் வட்டாட்சியர் சி.ஜெயமணி வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.