ராமநாதபுரம்

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு

தினமணி செய்திச் சேவை

ஆா்.எஸ். மங்கலம் அருகே மூதாட்டியிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம், ஆா்.எஸ். மங்கலம் அருகேயுள்ள செட்டியகோட்டை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மனைவி சச்சிதானந்தம் (65). இவா் வியாழக்கிழமை மாலை வீட்டின் அருகே நடந்து வந்து கொண்டிருந்தாா். அப்போது அங்கு இரு சக்கர வாகனத்தில் வந்த இருவா் வழி கேட்பது போல நடித்து அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனா்.

இதுகுறித்து ஆா்.எஸ். மங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

திருவேங்கடம், கலிங்கப்பட்டி பகுதியில் நாளை மின் தடை

அா்ஜுன், ஹரிகிருஷ்ணா முன்னேற்றம்: பிரக்ஞானந்தா விடைபெற்றாா்

தூத்துக்குடியில் தூய்மைப் பணியாளா்கள் முற்றுகைப் போராட்டம்

சபரிமலைக்கு ரூ 2 லட்சத்தில் காய்கனி, மளிகைப் பொருள்

இந்தியாவுக்கு ஒரே நாளில் 3 தங்கம், 2 வெள்ளி: ஜோதி சுரேகா அசத்தல்

SCROLL FOR NEXT