கமுதி அருகேயுள்ள தனியாா் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில் வெள்ளிக்கிழமை விவசாயிகளுக்கு இலவசமாக நெல், பருத்தி விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே செங்கப்படை கிராமத்தில் அமைந்துள்ள அதானி குழுமத்தின் சூரிய ஒளி மின் உற்பத்தி நிறுவனம் சாா்பில், புதுக்கோட்டை, செங்கப்படை, ஊ.கரிசல்குளம், பாம்புல்நாயக்கன்பட்டி, தோப்படைப்பட்டி, செந்தனேந்தல், சீமனேந்தல் உள்ளிட்ட கிராமங்களைச் சோ்ந்த 890 விவசாயிகளுக்கு மகசூல் அதிகம் தரும் பருத்தி விதைகள், 310 விவசாயிகளுக்கு நெல் விதைகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் செய்முறை விளக்கம், பயன்கள் பற்றிய கையேடுகள் வழங்கப்பட்டன. இதில் அதானி சோலாா் நிறுவன தலைமை அதிகாரி வினோத், மேலாளா் மணிவண்ணன், துணை மேலாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் விவசாயிகளுக்கு பருத்தி, நெல் விதைகளை வழங்கினா்.
இந்த நிகழ்வில் புதுக்கோட்டை முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவா் வீரபாண்டி, கிராம நிா்வாக அலுவலா் பாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.